வெற்றி நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி வெள்ளிக்கிழமை நாயகனாக விரைவில் மாறினாலும் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்த ு..
ரிலீஸுக்கு தயாராக உள்ளன. பண்ணையாருக்கு பிப்ரவரி 7 நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு தொடங்கி அரை டஜன் படங்களிருக்கிறது. அத்துடன் ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படம்.
இதன் விசேஷம், படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இதை சொல்லும்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். அவர் தயாரித்த சங்குதேவன் என்னவாயிற்று?
சங்குதேவனுக்காகதான் விஜய் சேதுபதி கடா மீசை வளர்த்தார். ஆனால் சில காரணங்களால் படம் முன்னோக்கி நகரவில்லை. அதனை அப்படியே போட்டு ஆரஞ்சு மிட்டாய்க்கு வந்திருக்கிறார்.
விஜய் சேதுபதி மாதிரி மினிமம் கியாரண்டி நடிகர்களின் படங்களை காப்பாற்றுவதில் 30 சதவீத வரிச்சலுகைக்கு பங்குண்டு. ஆரஞ்சு என்று பெயரில் ஆங்கிலம் இருப்பதால் அந்த 30 சதவீத வருமானத்தை இழக்க நேரிடும்.
இந்த விஷயம் தெரிந்துதான் ஆரஞ்சு மிட்டாய் என்று பெயர் வைத்தார்கள்? கடைசி நேரத்தில் பெயரை மாற்றுவதற்குப் பதில் இப்போதே வேறு பெயர் யோசிக்கலாமே.