வாரந்தோறும் திரைப்படங்களை திரையிடுவது, விமர்சனக் கூட்டங்கள் நடத்துவது என சென்னை கலையார்வலர்களின் விருப்பத்துக்குரிய இடமாக பனுவல் புத்தக விற்பனை நிலையம் மாறியிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-14) பாலுமகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் குறித்த கலந்துரையாடலுக்கு பனுவல் ஏற்பாடு செய்துள்ளது.
மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த கலந்துரையாடலில் அம்ஷன் குமார், ரோகிணி, ராஜ சுந்தர்ராஜன், பொன்.சுதா, சுப.குணராஜன், இரா.தெ.முத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதில் நீங்களும் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம். அனுமதி இலவசம்.