ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
வருடத்துக்கு இரண்டுமுறை, இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி கிளம்பும். ராணி முகர்ஜியும், ஆதித்யா சோப்ராவும் அதனை மறுப்பார்கள். இந்த கண்ணாமூச்சி பிப்ரவரி 10 ஆம் தேதி முடிவுக்கு வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்று இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதித்யா சோப்ராவின் தந்தையும், பிரபல இயக்குனருமான யாஷ் சோப்ரா 2012 அக்டோபரில் மரணமடைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்ருகன் சின்கா ராணி முகர் ஜ pயை ராணி முகர்ஜி சோப்ரா என்று அழைத்ததும், ராணி முகர்ஜி அதற்கு ஆட்சேபம் தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.