முன்னணி நடிகைகள் வரும் புத்தாண்டை கொண்டாட பெரும்பாலும் வெளி நாடுகளுக்கே செல்கின்றனர். அமலாபால், ஹன்சிகாவைத் தொடர்ந்து தற்போது நடிகை பிரியாமணியும் புத்தாண்டை கொண்டாட பாங்காக் சென்றுள்ளார்.
தனது தோழிகளோடு பயணமான அவர், பாங்காக்கில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகிறார். அங்குள்ள ஒரு புலிகள் சரணாலயம் எனும் டைகர் கோவிலுக்கு சென்ற பிரியாமணி புலிகளுடன் பயமில்லாமல் அன்போடு அருகில் சென்று பழகியிருக்கிறார்.
சில புலிகள் ப்ரியமாக அவரது மடியில் குழந்தை போல படுத்துக் கொண்டனவாம். அதை வாஞ்சையோடு தடவியும் கொடுத்துள்ளார். ஏற்கனவே வீட்டு விலங்குகளுடன் பாசம் காட்டும் பிரியாமணிக்கு இது புது அனுபவமாக இருந்ததாக தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.