ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் ஏற்கனவே அசையும் படம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது ஒளிப்பதிவுக்காக வந்த முதல் தமிழ் நூலாகும். விற்பனையில் சாதனை படைத்தது. சினிமா துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூலாக வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் ஒளிப்பதிவு சம்பந்தமாக பிக்சல் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில், டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்திற்கு உதவும் வகையில் புதியதாக வந்திருக்கும் அனைத்து விதமான டிஜிட்டல் கேமரா பற்றியும், அதன் பயன்பாடுகள், கையாளும் முறை பற்றியும் அழகாக, தெளிவாக எழுதியிருக்கிறார்.
இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி 4ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இப்புத்தகத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திரா வெளியிடுகிறார்.