நல்ல தரமான தமிழ் படங்களை, வெளிநாடுகளில் எந்த மூலையில் இருக்கும் தமிழர்களும் பார்த்து மகிழவேண்டும் என்பதற்காக இன்டெர்நெட் மூலம் தமிழ் படங்களை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது கனெக்ட்பி என்ற நிறுவனம்.
ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் குறைந்த அளவிளான தியேட்டர்களே இருப்பதால், தமிழர்கள் எல்லோராலும் படம் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இன்னும் சில ஊர்களில் தியேட்டர்களே இல்லாமலும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஊர்களிலும் இனி இன்டெர்நெட் மூலம் தமிழர்கள் பிடித்த படங்களை பார்க்கலாம்.
இதற்காக தங்களது வெப்சைட்டில் 300க்கும் மேற்பட்ட பழைய படங்களும், 50க்கும் மேற்பட்ட புதிய படங்களையும் வாங்கி டவுன்லோடு செய்து வைத்துள்ளது இந்நிறுவனம். தவிர, இந்தப் படங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்கும்படியான தொழில்நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள்.