தனது இந்தப் படம் குறித்து மனோஜ் குமார் கூறியிருப்பதாவது:
இன்றைய கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் மன நிலையை அழகாக பதிவு செய்திருக்கிறேன். அத்தோடு இக்கால இளைய இயக்குனர்களுக்கு சவால் விடும் விதமாகவும் காட்சிகளை வித்தியாசமாகவும், புதுமையாகவும் அமைத்திருக்கிறேன்.
கண்டிப்பாக இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் இந்த உயிருக்கு உயிராக பிடிக்கும். படம் முடிந்ததும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு போட்டு காட்டினேன். என்னுடைய எந்த படங்களைப் பற்றி எதுவும் பேசாதவர், இந்தப் படத்தை வெகுவாக பாராட்டினார். அவரின் பாராட்டு எனக்கு பல விருதுகளை பெற்றுத் தந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. என்கிறார் இயக்குனர ்.