இதை கவனித்து வந்த சேதுபதி அதை உண்மையாக்கும் விதமாக, தனக்கு நெருக்கமான, தன் மீது அக்கரை கொண்ட நண்பர்கள் நான்கைந்து பேரை தேர்வு செய்து, கதை விவாதக் குழு என தனது சொந்த செலவில் அமைத்திருக்கிறார். அவர்களுடன் சேர்ந்துதான் கதை கேட்கிறார். ஓரளவுக்கு தேறும் என்று தெரிந்தால் தன் டீமோடு அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். இதனால் இனி வரும் படங்களும் வெற்றிப் படமாக இருக்குமாம்.