ராஜமௌலி இதுவரை இயக்கிய அனைத்துப் படங்களும் வெற்றி. கடைசியாக இயக்கி வெளிவந்த நான் ஈ யில் கிராபிக்ஸ் ஈயை வைத்து இந்தியா முழுவதையும் மிரட்டினார். படத்தில் நடித்த அனைவரையும் நான் ஈ பிரபலப்படுத்தியது.
தற்போது அதைவிட பல மடங்கு பிரமாண்டமாக மகாபலி என்ற சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடிக்கும் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழில் மகாபலி என்ற பெயரிலும், தெலுங்கில் பாகுபலி என்ற பெயரிலும் இப்படம் தயாராகிறது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 23-12-13 அன்று ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படத்துக்காக போடப்பட்ட பிரமாண்ட அரங்கில் தொடங்குகிறது. அதில் தமன்னாவும் கலந்து கொள்கிறார். அனுஷ்கா முக்கிய பாத்திரமேற்றிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க தமன்னாவிடம் கேட்ட போது தயங்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.