இந்த வருடம் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் 226 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. பின்னாலேயே வந்த க்ரிஷ் 3, 244 கோடிகளை வசூலித்து அச்சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இன்று வெளியான தூம் 3 இவ்விரு படங்களின் வசூலை தாண்டிச் செல்லும் என விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். ஏற்கனவே ரிசர்வேஷன் மூலம் அதிக வசூலை பெற்ற ஏக் தா டைகரின் சாதனையை இப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
படம் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இணையதளங்கள் நான்கும் நான்கரையும் ஸ்டார்கள் தந்துள்ளன. க்ளீன் என்டர்டெய்னர் என்ற விமர்சனத்தை பெற்றிருப்பதால் மூன்றாவது நாளிலேயே 100 கோடியை இப்படம் தாண்டும் என்பது உறுதியாகியிருக்கிறது. மொத்தமாக 250 கோடிகளை தாண்டி வசூலித்து சாதனை படைக்கும் என்று கணித்துள்ளது நிபுணர்கள் வட்டாரம்.
வெளிநாடுகளிலும் படம் சூப்பர் ஓபனிங்கை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.