திரையரங்கு தட்டுப்பாடு - தள்ளிப் போகும் படங்கள்
, வியாழன், 19 டிசம்பர் 2013 (12:01 IST)
திரையரங்குகள் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதம் திரைக்கு வரவேண்டிய பல படங்களின் வெளியீட்டு தேதி அடுத்த மாதத்துக்கு தள்ளிப் போகிறது.
இந்தியாவில் அதிக படங்கள் தயாரிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஹிந்திப் படங்களைவிட தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகம். திரையரங்குகளின் எண்ணிக்கை அதற்கு ஏற்ப இல்லை. ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழகத்தில் திரையரங்குகள் உள்ளன. புதிய படங்களை வெளியிடும் நிலையில் உள்ள திரையரங்குகள் 750 க்கும் குறைவு.முறையான பராமரிப்பின்மை, நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கொள்ளையடிப்பது போன்ற
காரணங்களால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். பக்கத்து மாநிலம் ஆந்திராவில் செழிப்பான நிலையில் இருக்கும் திரையரங்கு தொழில் இங்கு முடங்கிப் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை செப்பனிடும் முனைப்பு ஒருவரிடமும் இல்லை.