Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் காவிய தலைவன்

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2013 (18:54 IST)
FILE
வசந்தபாலன் தனது காவிய தலைவன் படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கினார். இந்த ஷெட்யூல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடரும்.

காவிய தலைவன் முப்பதுகளின் பின்னணியில் சொல்லப்படும் கதை. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதையிது என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதனை வசந்தபாலன் மறுத்தார். படத்தின் ஐம்பது சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் இன்று சென்னையில் தனது புதிய ஷெட்யூலை தொடங்கியுள்ளார்.

சித்தார்த், பிருத்விரா‌ஜ், வேதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஹைலைட் ஏ.ஆர்.ரஹ்மான். முதல்முறையாக ரஹ்மான் வசந்தபாலனின் படத்துக்கு இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் என கூறப்படுகிறது. அனைத்துப் பாடல்களின் கம்போஸிங்கையும் ரஹ்மான் முடித்துவிட்டது படயூனிட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாராகும் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ தயா‌ரிக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

Show comments