Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் காவிய தலைவன்

சென்னையில் காவிய தலைவன்
, வியாழன், 5 டிசம்பர் 2013 (18:54 IST)
FILE
வசந்தபாலன் தனது காவிய தலைவன் படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கினார். இந்த ஷெட்யூல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடரும்.

காவிய தலைவன் முப்பதுகளின் பின்னணியில் சொல்லப்படும் கதை. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதையிது என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அதனை வசந்தபாலன் மறுத்தார். படத்தின் ஐம்பது சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் இன்று சென்னையில் தனது புதிய ஷெட்யூலை தொடங்கியுள்ளார்.

சித்தார்த், பிருத்விரா‌ஜ், வேதிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் ஹைலைட் ஏ.ஆர்.ரஹ்மான். முதல்முறையாக ரஹ்மான் வசந்தபாலனின் படத்துக்கு இசையமைக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் என கூறப்படுகிறது. அனைத்துப் பாடல்களின் கம்போஸிங்கையும் ரஹ்மான் முடித்துவிட்டது படயூனிட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாராகும் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ தயா‌ரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil