பிரச்சனை - ஜன்னல் ஓரம், விடியும்முன் படங்கள் வெளியாகவில்லை
, வெள்ளி, 29 நவம்பர் 2013 (15:36 IST)
இன்று ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி, விடியும்முன் ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் ஜன்னல் ஓரம், விடியும்முன் படங்களின் ப்ரிண்ட் வராததால் திரையரங்குகளில் இவ்விரு படங்களும் வெளியாகவில்லை.
ஜன்னல் ஓரம், விடியும்முன் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் கடைசி நேரப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாலோ பிரிண்ட்கள் அனுப்பப்படவில்லை எனவும், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலைக் காட்சிக்கு பிரிண்ட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.படம் வெளியாகாததற்கான உண்மைக் காரணம் தெரியவில்லை.