Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவை சூசகமாக தாக்கிய தங்கர்

இளையராஜாவை சூசகமாக தாக்கிய தங்கர்
, வியாழன், 4 அக்டோபர் 2012 (14:14 IST)
பஞ்சப் பாட்டு பாடுவதில் தங்கர்பச்சானுக்கு கிராமி அவார்ட் தரலாம். அதுவும் மேடை கிடைத்துவிட்டால் இவர் ச‌ரியான மைக் முழுங்கி. ஒண்ணுமே ச‌ரியில்லை ஒலகமே ச‌ரியில்லைன்னு புலம்பித் தள்ளுவார் பாருங்க... அள்ள ரெண்டு குப்பை வண்டி வேணும்.

FILE
அம்மாவின் கைப்பேசி எடுக்கப் போறது உறுதியானதும் இளையராஜாவிடம் சென்று தலையை சொறிந்திருக்கிறார். சொந்தமா எடுக்கிறேன் ஏதோ பேருக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ வாங்கிக்கங்க என்ற ‌ரீதியில் போட்டிருக்கிறார் ஒரு ராப்பாட்டு. அப்பாலே போ சைத்தானே என்று துரத்தியிருக்கிறார் இளையராஜா. ஞானியிடம் பழம் பழுக்காத கோபத்தில் புதிதாக ஒரு இசையமைப்பாளரை களம் இறக்கி புதிய இசை, புதிய திசை என்றெல்லாம் விளம்பரப்படுத்தினார். இந்த நமைச்சல் பிரஸ்மீட்டில் வெடித்தது.

இங்க எவனுமே ச‌ரியில்லை கதை எழுதினா நடிக்க வரமாட்டேனுறாங்க, இசையமைப்பாளரும் அப்படிதான் நிறைய துட்டு கேட்கிறானுங்க, இசையும் வாய்ல ஸாரி காதுல கேட்க முடியிறதில்லை என்று பிராய்ந்து தள்ளினார். அங்கே வாங்கிய குட்டுக்கு இங்கே வந்து மைக்கை வீங்க வைப்பதில் என்ன நியாயம். கேட்கிறவன் காது வலிக்குதில்ல.

ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர் எஸ்ஆர்எம் கல்வி ‌நிறுவன தலைவர் பச்சை முத்து என்கிற பா‌ி வேந்தர். ஓட்டுக்காக தோளில் கலப்பையுடன் போஸ் தந்த மல்டி மில்லியனர் விவசாயி.

அட்ரா சக்கை இதுதாண்டா கூட்டணி.

Share this Story:

Follow Webdunia tamil