இரண்டாவது உலகம் படப்பிடிப்பின் போது அனுஷ்கா ஆர்யாவுக்கு யோகா சொல்லித் தந்திருக்கிறார். அவரும் தொடர்ந்து யோகா பயில்கிறாராம். யோகாவினால் ஆர்யாவின் ஞாபக அடைப்புகள் சில திறந்திருக்கின்றன. படித்துறை என்ற படத்தை தய ா ரித்திருப்பதும் இப்போதுதான் ஆர்யாவுக்கு நினைவு வந்திருக்கிறது.
சகா இயக்கியிருக்கும் இந்தப் படம் நெல்லையின் வாழ்க்கையை மண் மணத்தோடும், தாமிரபரணி சிலுசிலுப்போடும் சொல்கிறது. ஆர்யாவுக்கு என்ன பிரச்சனையோ படம் முடிந்தும் இன்னும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கவில்லை. ஒரு சுபயோக சுப தினத்தில், இனி படித்துறைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாமிரபரணியில் முழுக்குப் போட்டார் சகா. அப்போதும் ஆர்யாவுக்கு அடைப்புதான். இப்போதுதான் அது சரியாகியிருக்கிறது.
படித்துறை நல்ல படம், சகா ரொம்ப நன்றாக எடுத்திருக்கிறார். சில காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை. நல்ல படங்களை தொடர்ந்து தய ா ரிக்கவே விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.
ஆர்யா தேர்வு செய்திருக்கும் வார்த்தைகளைப் பார்த்தால் சகாவின் பிரசன்ஸ் மீண்டும் ஆர்யாவுக்கு தேவைப்படுகிறது என்பதை ஸ்மெல் செய்யலாம்.