Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டை மன்னன் - சுவாரஸிய தகவல்

வேட்டை மன்னன் - சுவாரஸிய தகவல்
, வெள்ளி, 22 ஜூன் 2012 (15:29 IST)
முதலில் போடா போடி, அடுத்து வாலு என்று முடிவு செய்திருக்கிறார் சிம்பு. வாலுக்கு முன்பு தொடங்கிய வேட்டை மன்னன் இவ்விரு படங்களுக்குப் பிறகே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதையும், மெனக்கெடல்களும்.

வேட்டை மன்னன் கேங்ஸ்டர் படம். இதன் முக்கிய காட்சிகளை கலவர பூமியான பிரெசிலில் எடுக்க‌‌த் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்குள்ள லோக்கல் ரவுடிகளின் ஆதிக்கத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால் வேறொ ஐடியா செய்துள்ளனர். அதாவது கேமராமேன் சக்தி பிரெசில் சென்று தேவைப்படும் லொகேஷன்களை படமெடுப்பது. பிறகு அந்தக் காட்சிகளை அரங்கத்தில் எடுக்கும் காட்சிகளுடன் மேட்ச் செய்வது.

இந்த திட்டத்தின்படி அரங்குகளை பாங்காங்கில் அமைக்க இருக்கிறார்கள். படத்தின் இயக்குனரும், ஆர்ட் டைரக்டர் இளையராஜாவும் இதற்காக பாங்காங் செல்கின்றனர்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜெய், தீ‌க்சா சேத், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil