பெயரில் தங்கம் வைத்திருக்கும் இவர் ஒரு தன்முனைப்பு தகரம். அஜீத் கருணாநிதியின் முன்னிலையில், விழாவுக்கு வந்தேயாக வேண்டும் என்று சிலர் மிரட்டுவதாக கூறிய போது, இந்த தகரம்தான் அளவுக்கு அதிகமாக அஜீத்தை குறை கூறியது. மேலும் அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என ஒரு போலி குற்றச்சாற்றை போலீஸில் பதிவு செய்தது. அந்தப் பழைய ஸ்டண்டை மீண்டும் போட்டிருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.
பெப்சியைப் போல் இன்னொரு அமைப்பை தொடங்க வேண்டும் என்ற பெருவ ா ரியான தய ா ரிப்பாளர்களின் முடிவுக்கு உடன்படாமல் கூட்டத்திலிருந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியேறியது சில தினங்கள் முன் நடந்தேறியது. அதைத் தொடந்து அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தந்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். புக ா ரின் சாரம்சம் இதுதான்.
எஸ்.ஏ.சந்திரசேகரனும், தேனப்பனும் கூட்டத்தில் பேசிய என்னை அடிக்கப் பாய்ந்தார்கள், கேவலமாக திட்டினார்கள், சந்திரசேகரன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார், அதன் பிறகு எனக்கு மர்ம ஃபோன்கால்கள் வருகின்றன. ஆகவே தகுந்த நடவடிக்கையை சந்திரசேகரன் மீது எடுக்க வேண்டும்.
இந்த டுபாக்கூர் புகார் செலவாணியாகப் போவதில்லை என்பது ஒருபுறம். சந்திரசேகரன் அடிக்கப் பாய்ந்த போது இந்த காந்தீயவாதி என்ன செய்து கொண்டிருந்தாராம்? அடித்துவிடுவதற்கும் ஒரு அளவில்லையா.