பொன்னியின் செல்வன் ட்ராப் என அறிவித்த பிறகு எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி... மணிரத்னத்தின் புதிய படத்தின் ஹீரோ யார்?
புதுமுகங்கள் என்பதுதான் அதிகமானவரின் பதிலாக இருந்தது. ஆனால் புதுமுகம் அல்ல... பழைய முகம் அதுவும் பழகிய முகம் என்கின்றன லேட்டஸ்ட் தகவல்கள்.
அக்னி நட்சத்திரம், தளபதி, போன்று அனைவரையும் கவரும் கமர்ஷியல் படம் ஒன்றை இயக்க விரும்புகிறாராம் மணிரத்னம். இதற்கு சரியான ஆள் விஜய் என்பது அவரது கருத்தாம். பொன்னியின் செல்வனுக்காக விஜய்யிடம் வாங்கிய கால்ஷீட் அவரிடம் உள்ளது.
இந்தக் காரண காரியங்களை கூட்டிக் கழித்து விஜய்தான் மணிரத்னத்தின் ஹீரோ என்கிறார்கள். சந்தேகத்தை தீர்க்க வேண்டிய விஜய், மணிரத்னம் இருவருமே மௌனராக மேதைகள். உண்மை அறிய காத்திருக்கத்தான் வேண்டும்.