விஜய்யே நினைத்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என்ற நிலையில்தான் அவரது இன்றைய நிலைமை இருக்கிறது.
விஜய்யின் காவலன் பிரச்சனையில் சிக்கிய போது சில ஏரியாக்களை வாங்கி கை கொடுத்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர்தான் தயாரித்து வருகிறார். காவலன் படம் சூப்பர்ஹிட் என்றெல்லாம் விளம்பரம் செய்தாலும் பலருக்கு பல லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ரவியும் ஒருவர்.
விஜய்யின் தந்தை பிரச்சாரத்துக்கு கிளம்பியதையே தாங்க முடியாமல் அவரது மக்கள் இயக்கம் சிதறு தேங்காய் ஆனது. விஜய்யே கிளம்பிப் போனால்...?
அரசியல், பிரச்சாரம் என்று வேலாயுதம் பிசினஸை கெடுத்திடாதீங்க என தயாரிப்பாளர் தரப்பில் கறாராக சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய்யே விரும்பினாலும் தேர்தல் பிரச்சாரம் சாத்தியமில்லை என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.