மணிரத்னம் படம் குறித்த செய்திகள் அவரது படங்களைப் போலவே மர்மமாகவே இருக்கும். நாமாக தேடி தெரிந்து கொண்டால்தான் உண்டு.
மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் விக்ரம், விஜய், விஷால் நடிப்பார்கள் என கூறப்பட்டது. இப்போது இந்த வரிசையில் சின்ன மாற்றம்.
விஷாலுக்குப் பதில் ஆர்யா நடிப்பார் என மணிரத்னத்தின் அலுவலக வட்டாரம் கிசுகிசுக்கிறது.
லிங்குசாமி, பிரபுசாலமன், பூபதி பாண்டியன் என மூன்று இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் மணிரத்னம் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். மணிரத்னம் மௌனம் கலைத்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.