ஏ.ஆர்.முருகதாஸ் என்றதும் இந்தியில் அவர் பெற்ற வெற்றிதான் நினைவுக்கு வரும். அதுவே அவருக்கு தொல்லையாகவும் மாறியிருக்கிறது.
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் 7ஆம் அறிவு படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். இதுவரை உலகில் யாரும் சொல்லாத கதை என்று சவால்விட்டே படப்பிடிப்பை இவர் தொடங்கினார் என்பது முக்கியமானது.
இந்தப் படத்தை முருகதாஸ் இந்தியில் டப் செய்கிறார் இல்லையில்லை ரிமேக் செய்கிறார் என்று பல்வேறு ஹாஸ்யங்கள். சிலர், ஷாகித் கபூரை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் என்றே எழுதினர்.
இந்தக் குழப்பத்தையெல்லாம் தனது விளக்கத்தின் மூலம் போக்கியிருக்கிறார் முருகதாஸ். படத்தை முடிப்பதுதான் முதல் வேலை. அதற்குப் பிறகுதான் டப்பிங்கா இல்லை ரீமேக்கா என்ற யோசனையெல்லாம். இப்போது படம் குறித்து வருவதையெல்லாம் நம்ப வேண்டாம் என்றிருக்கிறார் தெளிவாக.
இந்தத் தெளிவுதான் முருகதாஸின் படங்களையும் ஓட வைக்கிறதோ?