ஈரம் படத்தில் வில்லன் என்றாலும் ஹீரோ அளவுக்கு நந்தாவுக்கு பெயர் கிடைத்தது. ஷங்கர் தயாரிப்பில் அடுத்து வெளியவரவிருக்கும் ஆனந்தபுரத்து வீடு படத்திலும் நந்தா நடித்திருக்கிறார். இதில் ஹீரோ. ஜோடி சாயா சிங்.
தற்போது வேலூர் மாவட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தா. முழுக்க வேலூரில் தயாராகும் இந்தப் படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி வேடம்.
தமிழகத்திலேயே வேலூரில்தான் உட்சபட்ச வெயில் கொளுத்துகிறது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புழுதி என்ற படத்திலும் சோலோ ஹீரோவாக நடிக்கிறார் நந்தா.