அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு திரைப்பட விழாக்கள் எதிலும் தலைகாட்டுவதில்லை விஜயகாந்த். தலைகாட்டக் கூடாது என்று எந்த பிடிவாதமும் இல்லை. நேரமின்மையே இதற்கு காரணம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார் விஜயகாந்த்.
ஃபிலிம் பேப்ரிகேட்டர்ஸ் தயாரித்திருக்கும் ரேனிகுண்டாவின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. சத்யம் சினிமாஸில் இன்று மாலை நடைபெற இருக்கும் விழாவுக்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
ரேனிகுண்டாவை பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார். இசை கணேஷ் ராகவேந்திரா. பிறைசூடன், நா.முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தயாரிப்பாளர் சக்ரவர்த்தியின் மகன் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஜயகாந்தின் விசிட்டுக்கு இதுவே காரணம் என்கிறார்கள்.