Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா வீட்டுமுன் தண்டோரா – நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:51 IST)
நான ் கடவுள் படத்தின் தய ா‌ ரிப்பாளர் சீனிவாசன், இயக்குனர் பாலா ஆகிய ோ‌ ரின் வீடு மற்றும் அலுவலகங்களின ் முன் தண்டோரா போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான ் கடவுள் படத்தில் ஊனமு‌ற்றோரை பிச்சைக்காரர்களாக சித்த‌ரித்திருப்பதுடன் அவர்கள் வாழ தகுதியற்றவர்களாகவும் காட்சிகள் வைத்துள்ளனர். அதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விச ா‌ ரித்த நீதிபதி, படத்தின் தய ா‌ ரிப்பாளர் சீனிவாசனும், இயக்குனர் பாலாவும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பதில் மனு அளிக்க உத்தரவிட்டார்.

ஆனால் சீனிவாசனும், பாலாவும் குறிப்பிட்ட தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சீனிவாசன் மற்றும் பாலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து பதில் மனு அளிக்குமாறு சீனிவாசன் மற்றும் பாலா ஆகிய ோ‌ ரின் வீடு மற்றும் அலுவலகங்களின் முன் தண்டோரா போட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தணிக்கைத் துறையையும் நீதிமன்றம் க ோ‌ ரியிருந்தது. அவர்களும் பதிலளிக்கவில்லை. அதனால் தணிக்கை அலுவலகத்துக்கு முன்பும் தண்டோரா போட நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments