Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநா - நில மோசடி கதை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:29 IST)
ஒரு தொழிலில் இருந்து கொண்டு அந்த தொழிலின் அயோக்கியங்களை வெளிப்படுத்த துணிச்சல் வேண்டும். திருநா படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த துணிச்சல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஈகை கருணாகரன் தயாரிக்கும் முதல் படம், திருநா. படம் தயாரிக்கும் எண்ணம் திடீரென்று எப்படி வந்தது என்று கேட்டால், மகனை ஹீரோவாக்க என பதில் வருகிறது. கருணாகரனின் மகன் சுபாஷ்தான் திருநா-வின் ஹீரோ. சுபா‌ஷ‌ின் ஒரிஜினல் பெயர், அருண் குமார். ஏற்கனவே ஒரு அருண் விஜய் இருப்பதால் குழப்பம் வேண்டாம் என பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

படத்தில் சுப ாஷ‌ ின் பெயர் திருநாவுக்கரசு. சுருக்கமாக திருநா. அதையே படத்தின் டைட்டிலாக்கியிருக்கிறார்கள். மதுரையிலிருந்து சென்னைக்கு தனது சொத்துக்களை விற்க வருகிறார் ஹீரோ. அவரை சிலர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். அதை எப்படி ஹீரோ முறியடிக்கிறார் என்பது திருநாவின் கதை.

ரியல் எஸ்டேட் மோசடிகளை பின்னணியாக வைத்து திருநாவின் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். இதே கதைக் களத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments