விஜய் பேட்டி!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:23 IST)
விஜய் நடிக்கும் வில்லு படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உடன்குடி அருகிலுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

இங்குள்ள மணப்பாடு, தேரிக் குடியிருபூபு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது, ரசிகர்கள் ஏராளமாக குவிந்ததால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்த விஜய் எடுத்த முயற்சி வீணானது.

பிறகு நெல்லை வந்த விஜய், நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சென்னையில் 16 ஆம் தேதி தனது ரசிகர் மன்றம் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் நடைபெறும் என்றும், கறுப்பு உடையணிந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் விஜய் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

Show comments