Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவை சுவாசித்தவர் ஸ்ரீத‌ர்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (20:51 IST)
மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு நேற்று மாலை சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பிலிம் சேம்பரில் மலரஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீதர் இயக்கிய பல்வேறு படங்களில் நடந்த அனுபவங்களை அவரோடு பணியாற்றிய நிகழ்ச்சிகளை விளக்கினார்கள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

கூட்டம் தொடங்குவதற்கு முன் ஸ்ரீதரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் ஏராளமான திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், கே.ஆர்.ஜி., கே. பாலசந்தர், பாரதிராஜா, காஜா மைதீன், ராதாரவி, வி. சேகர், கோவை தம்பி, வி.சி. குகநாதன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அவர் இன்று நம்மிடம் இல்லாவிட்டாலும் அவர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, உரிமைக்குரல், காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்துள்ளன.

அப்போதே கதைகளில் பல புதுமைகளை செய்ததோடு அல்லாமல் உடல்ந ல‌ம ் சரியில்லாத போதும் படம் இயக்க வேண்டுமென்று இறுதி வரை உறுதியோடு இருந்தவர் ஸ்ரீதர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments