பொங்கலுக்கு தாய் காவியம்!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (15:23 IST)
பாடலாசி‌ரியர் பா. விஜய் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கும் படம் தாய் காவியம்.

ரஷ்ய நாவலாச ி‌ ரியர் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை கவிதை நடையில் சில காலம் முன்பு தமிழில் எழுதினார் முதல்வர் கருணாநிதி. அதன் அடிப்படையில் தாய் காவியத்தை எடுத்து வருகிறார்கள்.

படத்தின் பாடல் காட்சிகளில் இரண்டு சீனாவில் படமாக்கப்பட்டது. பிறகு கதையில் சில திருத்தங்கள் செய்வதற்காக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது தாய் காவியம் யூனிட் கதையில் முழு திருப்தி அடைந்துள்ளது. படப்பிடிப்பும் தடையின்றி நடந்து வருவதால் படம் விரைவில் முடிந்து விடும் என்று நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளார் படத்தின் நாயகனான பா. விஜய்.

படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளதால் பாடல் எழுதுவதை நிறுத்தவில்லை இவர். தொடர்ந்து நடித்தாலும் பாடல் எழுதுவதை மட்டும் கைவிட மாட்டாராம்.

கவித்துவமான முடிவு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments