வாரணம் ஆயிரம் - வதந்திக்கு முற்றுப்புள்ளி!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (20:09 IST)
நாளை வாரணம் ஆயிரம் படத்தின் இசை வெளியீடு. சோனி பி.எம்.ஜி. இசையை வெளியிடுகிறது.

வாரணம் ஆயிரம் தொடங்கிய போது குறைவான தொகைக்கு அதன் ஆடியோ உரிமையை விற்றதாகவும், தற்போது அதைவிட அதிகமான விலைக்கு வேறொரு நிறுவனம் ஆடியோ உரிமையை கேட்பதாகவும் கூறப்பட்டது.

படத்தின் இசை வெளியிடப்படாமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் வதந்தி கிளம்பியது.

சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், படம் வெளியாகும் அன்றே இசையும் வெளியிடப்படுகிறது என்று கிளப்பிவிட்டனர். படம் யானை என்றால் பாடல்கள் மணியோசை.

தமிழ் சினிமா வரலாற்றில் பல யானைகளுக்கு மணியோசையை வைத்துதான் மரியாதை. அப்படியிருக்க, வாரணம் ஆயிரம் இசையை முன்னதாக வெளியிடாமல் இருப்பார்களா?

நாளை இசை வெளியீட்டை நடத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார் தயாரிப்பாளர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments