நூறாவது நாள் - பழைய பெயர் புதிய கதை!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (19:16 IST)
பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்குப் பயன்படுத்துவது சாதாரணமாகி வருகிறது. தியோடர் பாஸ்கரன் போன்ற திரைப்பட ஆய்வாளர்கள் இதுகுறித்து கவலை தெரிவித்தும் கட்டுக்குள் வருவதாயில்லை இந்த போக்கு.

ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், படிக்காதவன், நாயகன், நம் நாடு, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், தசாவதாரம், மர்மயோகி என்ற நீண்ட வரிசையில் புதிதாக நூறாவது நாள். 1984ல் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் சத்யராஜின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்.

இதே பெயரில் புதுமுகம் ஜெரா, சுஜிபாலா நடிக்க தயாராகிறது ஒரு படம். கண்ணா என்பவர் இயக்கம். திரைத் துறையில் நூறாவது நாள் என்பது வெற்றியின் அடையாளம். ஒவ்வொரு கலைஞனுக்கும் முக்கியமானது.

சினிமா கலைஞனின் வாழ்வை, போராட்டத்தை சொல்லும் படம் என்பதால் நூறாவது நாள் பெயரை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார் கண்ணா.

நாசர், ராஜ்கபூர் ஆகியோரும் புதிய நூறாவது நாளில் நடிக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments