சொந்தக் குரல் த்ரிஷா, ஸ்ரேயா!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:07 IST)
ஒரு படத்தை விருது பிரிவுக்கு அனுப்புவதென்றால் அதில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும். பருத்தி வீரனில் ப்ரியாமணி சொந்தக் குரலில் பேசியதே அவர் தேசிய விருது பெற காரணம்.

தனது படங்களில் இதனை கறாராக பின்பற்றுகிறவர் கமல். ஹேராம் படத்தில் ஹாருக்கான், ராணி முகர்ஜி இருவரையும் சொந்தக் குரலில் தமிழ் பேசவைத்தார். தசாவதாரத்தில் அசினை அக்ரஹார தமிழ் பேச வைத்ததும் அவரே.

மர்மயோகியிலும் இது தொடர்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா இருவரும் டப்பிங் குரலில் காலம் தள்ளுகிறவர்கள். அவர்களுக்கு சரித்திர தமிழ் கற்றுக்கொடுத்து சொந்தக் குரல் பேசவைக்கப் போகிறாராம்.

நடிப்பை விட இது இருவருக்கும் கஷ்டம். ஆனாலும், கமல் சொன்னால் சொந்தக் குரலில் பேசித்தானே ஆகவேண்டும்.

கமலுக்கு சொந்தக் குரல் செம்மல் என்று பட்டமே தரலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments