பூ பாடல் வெளியீட்டு விழா!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (16:25 IST)
சொல்லாமலே, ரோஜா கூட்டம், டிஸ்யூம் போன்ற படங்களை இயக்கியவர் சசி. இவர் தற்போது பூ என்ற படத்தை இயக்கி வருகிறார். மோசர் பேர் கம்பெனியோடு நேசகி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம்தான் பூ. என் மற்றப் படங்களைத் தாண்டியும் இது புதுமையாக இருக்கும் என்றார் இயக்குனர் சசி.

இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், அமீர், சுப்ரமணிய சிவா, மிஷ்கின், வஸந்த் மற்றும் எழுத்தாளர்கள் வண்ணதாசன், எஸ், ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ்.எஸ். குமரன் மற்றும் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சரி மிகவும் நம்பிக் கொண்டிருக்கும் படம் இது என்பதால், பெரும் வெற்றிப்படமாக அமைந்தால் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

Show comments