வாரணம் ஆயிரம் - படமும் பாடலும்!

Webdunia
வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:56 IST)
கெளதம் வாசுதேவ மேனன் இயக்கம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாடல்களை கேட்க எவ்வளவு பரவசமாக இருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், வாரணம் ஆயிரம் படத்தின் பாடல்கள் படம் வெளியாகும் வரை ரசிகர்களின் காதுகளை எட்டப் போவதில்லையாம். ஏன்...?

வாரணம் ஆயிரம் தொடங்கிய போது பாடல்களுக்கு நிர்ணயித்த விலையை விட அதிக விலை தர முன்வந்ததாம் இன்னொரு நிறுவனம். பழைய விலைக்கே தருவதா இல்லை புதிய நிறுவனத்துக்கு கைமாற்றி விடுவதா என்பதில் குழப்பம். அதனால் படம் வெளியாகும் பத்தொன்பதாம் தேதியே பாடல்களும் வெளியாகிறதாம்.

யானை படம் என்றால் பாடல்கள் மணி ஓசை. யானை வரும் முன் ஒலிக்க வேண்டிய மணி முதல் முறையாக யானையுடன் ஒலிக்கிறது. படம் வெளிவரும் முன் பாடல்கள் ஹிட்டாவது, படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும். பிறகு ஏன் இந்த ரிஸ்க்?

விடை தெரியாமல் விழிக்கிறது கோடம்பாக்கம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments