தேசிய விருதுக்கு அடிபோடும் நடிகை!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (17:34 IST)
கேரளா வரவுகளான அஸின், கோபிகா, மீரா ஜாஸ்மின், சந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு நாயகி தமிழில் இறக்குமதியாகியிருக்கிறார் சாரிகா.

விஜய் ஹீரோவாக நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜித் இயக்கிய படம் கி.மு. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம். சாரி ரித்திஸ் என்ற தனது சொந்தப் பெயரை சாரிகா என்று மாற்றி வைத்துக் கொண்டார். அப்பா ரித்தீஸ் - அம்மா சச்சிதா. சொந்த ஊர் கேரளாவில் உள்ள அழகான கண்ணூர்.

பி.சி.ஏ. வரை படித்துள்ள இவர் காலேஜில் படு சுட்டியாம். அதேபோன்ற கேரக்டர்தான் கி.மு.விலும் கிடைத்தது அதனால் தூள் பண்ணியிருக்கிறேன் என்று பெருமையாக சொல்லும் இவர், 2005 ஆம் வருடம் மிஸ் கேராள பட்டம் பெற்றவர்.

அத்தோடு பரதமும் நன்றாக ஆடத் தெரிந்தவர். ஷோபனா, மஞ்சுவாரியாரின் ரகிசை இவர். கி.மு.வில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு இரண்டு படங்களுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.

நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டுமென்பதுதான் உங்கள் ஆசையா என்றால், அதெல்லாம் இல்லை நல்ல நடிகை என்று பெயர் வாங்க வேண்டும். அத்தோடு தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றும் கூறுகிறார். பின்னே ஆசையில்லாத பிரியாமணிக்கே கிடைக்கும்போது, ஆசைப்படும் உங்களுக்கு கிடைக்காதா என்ன?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments