மனம் மாறிய இயக்குனர்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:22 IST)
மிருகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார் என இயக்குனர் சாமி மீது பத்மப்ரியா இயக்குனர் சங்கத்தில் புகார் செய்ய, இதை விசாரித்த இயக்குனர் குழு சாமியை ஓராண்டுகள் படம் எதுவும் இயக்கக்கூடாது என்று தடை விதித்தது.

அதற்குப் பின்னால் படம் ரிலீஸாகி நன்றாக ஓடவும் நான்கே மாதத்தில் தடையை நீக்க உத்தரவிட்டது இயக்குனர் சங்கம்.

ஸ்பாட்டில் சற்று கோபமாக நடந்துகொள்ளும் சாமி தற்போது தன்னை மிகவும் மாற்றிக் கொண்டுள்ளார். இனிமேல் யாருடனும் பிரச்சனை செய்வதில்லை என்று உறுதி செய்துகொண்டவர் தற்போது 'சரித்திரம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்தப் படத்திலும் 'மிருகம்' ஆதிதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார். இதில் ஆதியின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் நடித்த சித்தாரா, ராஜ்கிரண் ஜோடியாக சேர்ந்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக்க ஷோபனா, சுகன்யா, ரேகா என பல முன்னாள் நாயகிகளிடம் கேட்டு ஒப்புக்கொள்ளாததால் சித்தாராவை தேடிப் பிடித்திருக்கிறார் சாமி.

சாமி, சொன்ன சொல்லை காப்பாத்துங்க. ஸ்பாட்டில் டென்ஷனாகி யாரையும் அடித்துவிடாதீர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments