சேரனை முற்றுகையிட்ட நிருபர்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (15:41 IST)
ராமன் தேடிய சீதை இசை வெளியீட்டு விழாவில் அபஸ்வரமாக பேசி அனைவரையும் நெளிய வைத்தவர் சேரன்.

பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுவை நேற்று முளைத்த நடிகர்களே சட்டை செய்வதில்லை. சேரன் ஆலமரம். கிசுகிசு சலசலப்புக்கெல்லாம் அசைந்து கொடுக்கலாமா?

பத்திரிக்கை கிசுகிசுவை ஆதாரமாக வைத்து இசை விழாவில் சூடானார் சேரன். உணர்ச்சியின் வேகத்தில் பத்திரிக்கையாளர்களை தவறான வார்த்தையில் அவர் குறிப்பிட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை நிருபர்கள், கேமரா மேன்கள் அனைவரும் அரங்கைவிட்டு வெளியேறினர்.

தவறை உணர்ந்த சேரன் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். வெளியே சென்ற நிருபர்களிடம் அவர் சமாதானம் பேசப் போனபோது, சேரனுக்கு எதிராக நிருபர்கள் கோஷமிட்டனர்.

சேரனால் இசை விழா வசை விழாவானதில் அனைவருக்கும் வருத்தம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

Show comments