கன்னடர்களுக்கு ரஜினி கடிதம்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (16:20 IST)
ஒகேனக்கல் பிரச்சனையில் தான் பேசியது கன்னட மக்களைவேதனைப்படுத்தியதை அறிந்து வருத்தப்பட்டேன் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினி.

ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு பேசினார் ரஜினி. அவரது பேச்சு கன்னடர்களை புண்படுத்திவிட்டது, ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ரக்சண வேதிகே அமைப்பு போராடி வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்த படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் கொடுத்தனர். இதனால், குசேலன் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை சரி செய்யும் நோக்கில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதினார் ரஜினி. அதில் தனது வருத்தத்தை தெரிவித்தவர், யாருடைய மனதையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல. பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதே எனது கொள்கை, குறிக்கோள் என கூறியுள்ளார். தனது படத்தை தமிழர்கள் மட்டுமின்றி கன்னடர்கள், பிறமொழியினரும் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம் ரக்சன வேதிகே அமைப்பின் ஆக்ரோஷத்தை குறைத்துள்ளதாக கூறினார், கர்நாகட திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளில் ஒருவரான ராக்லைன் வெங்கடேஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments