கட்சி தொடங்கும் சூப்பர் ஸ்டார்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:42 IST)
அடுத்த மாதம் 8 ஆம் தேதி புதிய கட்சி தொடங்குகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

ஆந்திராவில் தனது ரசிகர் மன்றம் வழியாக ஏராளமான உதவிகள் செய்து வருகிறார் சிரஞ்சீவி. குறிப்பாக ரத்ததானம், கடந்த சில மாதங்களாக சிரஞ்சீவியை அரசியலில் குதிக்கும்படி அவரது ரசிகர்கள் நிர்பந்தித்து வருகின்றனர். ஆந்திராவில் பெரும்பான்மையாக உள்ள சிரஞ்சீவியின் சாதியினரும் ரசிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்.

சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த், தம்பி பவன் கல்யாண் இருவரும் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்தனர். கட்சியின் கொடி, கொள்கை, பெயர் குறித்து விவாதித்தனர்.

தனிக்கட்சியில் ரசிகர்கள் உறுதியாக உள்ளதால், ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாத்தில் மிகப்பெரிய பொதுகூகூட்டம் கூட்டி, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட தீர்மானித்துள்ளார் சிரங்சீவி. இவரின் முடிவு ஆந்திர அரசியலில் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments