காசு பத்தலை - கைவிரித்த இலியானா!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (20:36 IST)
கோடிக்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் அடுத்த ஆளைப்பாரு என கிளம்பி விடுகிறார் கேடி நாயகி இலியானா.

இவரின் பெரிய நோட்டு சம்பளம் கேட்டு பொறி கலங்கிப்போன தமிழ்த் தயாரிப்பாளர்கள் ஏராளம். ரஜினி படத்துக்கே தனது சம்பள ராவடியிலிருந்து இவர் இறங்கி வரவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுல்தான் தி வாரியலில் ரஜினி ஜோடியாக நடிக்க இலியானாவை அணுகினார். செளந்தர்யா. 20 நாள் கால்ஷீட், சம்பளம் இவ்வளவு என குறைவான தொகையை கூறியிருக்கிறார். ரஜினி ஜோடி என்றால் பேரம் பேசமாட்டார்கள் என்பது செளந்தர்யாவின் நம்பிக்கை.

ஆனால், இலியானா வேறு வகை. கோடிக்கு குறையக்கூடாது என காசில் குறியாயிருக்க, வேறு வழியின்றி விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்தார் செளந்தர்யா.

ரஜினி பட வாய்ப்பு பறிபோனதில் இலியானாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. ரஜினியுடன் நடிக்க ஆசைதான்... ஆனா காசு பத்தலையே என கைவிரிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

20 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் சீமான் திரைப்படம்.. சூப்பர்ஹிட் ஆகுமா?

அஜித் சார் அதுக்கு allow பண்ணவே இல்ல! உண்மையை உடைத்த கௌதம் மேனன்

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

Show comments