தலைப்புச் செய்தியின் நயன்-சிம்பு!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (20:31 IST)
பிரிந்தவர் கூடினால் பேரின்பம்! அந்த இன்பத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்களாம் சிம்புவும், நயன்தாராவும், நம்ப முடிகிறதா?

நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்களை கோர்த்தால் சுவாரஸ்யமான லவ் ஸ்டோரி தேறும்.

நயனும் சிம்புவும் பிரிந்த பிறகு, சிம்பு நயன்தாராவை பலமுறை சந்திக்க முயன்றார். ஒவ்வொரு முறையும் விழுப்புண்ணால் மனம் புண்பட்டாலும், பண்பட்டவர் போல் நயன்தாரா குறித்து தரக்குறைவாக எதுவும் பேசவில்லை சிம்பு. இதனால் நயன்தாராவின் மனதில் கசப்பை மீறி இனிப்பு தடவியிருக்கிறார் சிம்பு.

இந்நிலையில் த்ரிஷா, விஷால், நயன்தாரா மற்றும் இளம் நடிகர்கள் கலந்துகொண்ட பார்ட்டியில் திடீர் என்று சிம்புவும் வர, களைகட்டியிருக்கிறது பார்ட்டி. நடுவில் சிம்புவும், நயன்தாராவும் சக நடிகர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டனராம். இருவரும் தனிமையில் மனம்விட்டு பேசிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

பழைய நட்பை இருவரும் புதுப்பித்துக் கொண்ட சேதியை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. அதெப்படி மறுப்பார்கள் என்கிறார்கள் பார்ட்டியில் உடனிருந்தவர்கள்.

எப்படியோ மீண்டும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது ‌சி‌ம்பு, நயன் ஜோடி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments