சுந்தர் சி. ஜோடி ப்ரியாமணி?

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:06 IST)
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கயிருக்கும் படம் வாடா. தினா இசை. ஸ்கிரீன் ப்ளே எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு.

இந்த மூன்று சேதிகள் தவிர்த்து வாடா குறித்து எதுவும் தெரியாத நிலையில் நான்காவதாக ஒரு செய்தி ஸ்டுடியோ வட்டாரங்களில் உலவுகிறது.

வாடாவில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார் என்பதே அந்த சேதி. நாம் விசாரித்ததில், சுந்தர் சி தரப்பிலிருந்து ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என தெரியவந்தது. அதேநேரம் ப்ரியாமணி பக்கமிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.

இப்போதுதான் பரத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு வாய்த்துள்ளது. இந்த நேரம் வயதான ஹீரோவுடன் நடிப்பதா என அவர் யோசிக்கிறாராம்.

நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments