சுந்தர் சி. ஜோடி ப்ரியாமணி?

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (16:06 IST)
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கயிருக்கும் படம் வாடா. தினா இசை. ஸ்கிரீன் ப்ளே எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு.

இந்த மூன்று சேதிகள் தவிர்த்து வாடா குறித்து எதுவும் தெரியாத நிலையில் நான்காவதாக ஒரு செய்தி ஸ்டுடியோ வட்டாரங்களில் உலவுகிறது.

வாடாவில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார் என்பதே அந்த சேதி. நாம் விசாரித்ததில், சுந்தர் சி தரப்பிலிருந்து ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என தெரியவந்தது. அதேநேரம் ப்ரியாமணி பக்கமிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.

இப்போதுதான் பரத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு வாய்த்துள்ளது. இந்த நேரம் வயதான ஹீரோவுடன் நடிப்பதா என அவர் யோசிக்கிறாராம்.

நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

Show comments