அறிக்கை நடிகைகள்!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2008 (19:12 IST)
நடிக்கும் போது நடித்துவிட்டு பின் அதற்கொரு சமாதானம் சொல்வதே நடிகைகளுக்கு வழக்கமாகிவிட்டது.

' கலாபக் காதலன்' படத்த ி ¨ல் நடித்த அக்சயா. அக்கா புருஷனை விரும்பும் கேரக்டரில் நடித்தார். படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியதும் 'அக்காவின் கணவன் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் கேரக்டருக்கு ஆர்யா ஒரு ஆண் அவ்வளவுதான். அதனால் அப்படி காதலிக்கும் கேரக்டரில் நடித்தேன்' என்றார்.

அதேபோல், உயிர் படத்தில் சங்கீதா தன் கொழுந்தன் மீது ஆசை வைத்து தன் கணவனை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, 'இது நாட்டில் நடக்காத காரியமா? பல பணக்கார வீடுகளில் இன்றும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது' என்று அறிக்கை விட்டார்.

அதேபோல், 'அம்முவாகிய நான்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த பாரதி, 'என் கேரக்டர் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு தொழில்தானே' என்றார்.

அந்த வரிசையில் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த மதுமிதாவும் தற்போது காரணம் கற்பிக்கத் தொடங்கிவிட்டார். 'ஹீரோவை கடைசியில் திருத்துவதாக என் கேரக்டர் அமைந்தால் ஒப்புக்கொண்டேன்' என்று சொல்லி வருகிறார்.

பணம் பத்தும் செய்யும் என்பது போல், நடிக்க வந்துவிட்டால் எப்படியும் நடிக்கலாம் என்றாகிவிட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியை ஏன் ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? நீதிபதி கேள்வி..!

கால்சீட் இல்லைன்னு சொன்ன ரஜினி! 23 நாட்களில் படத்தை முடித்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்

9ஆம் தேதி தான் படம் ரிலீஸ்.. ஆனால் 8ஆம் தேதி இரவே பெய்டு பிரீமியர்.. ‘ஜனநாயகன’ அல்ல..!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா