Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 'சாமி'யாடிய ஸ்ரேயா!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (16:35 IST)
இடுப்பைக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பழுக்க வைத்தார் நடிகை ஸ்ரேயா. இந்த ஆக்சன் சம்பவம் நடந்தது திருப்பதியில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார் ஸ்ரேயா. தரிசனத்தை முடித்தவர் அதிகாலை 3.45 மணிக்கு வெளியே வந்தார்.

ஸ்ரேயாவின் தெய்வீக களையில் லயித்துப் போன ரசிகர் ஒருவர் அவர் பின்னாலேயே வந்துள்ளார். கூட்ட நெரிசலில் அவர் ஸ்ரேயாவுக்கு கை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. என்ன நடந்ததோ... திடீரென்று அந்த ரசிகரின் கன்னத்தில் அறை‌ந்தா‌ர் ‌ஸ்ரேயா. அடுத்த கணம் அவர் காரில் ஏறி சென்றுவிட, ஸ்ரேயாவின் பாதுகாப்புக்கு வந்த உள்ளூர் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணாவின் அடிபொடிகள் அந்த வாலிபரை துவைத்து எடுத்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவன் என் இடுப்பைக் கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் மோசமாக நடந்துகொண்டதால் அவனை அறைந்தேன் என்று பளாருக்கு விளக்கமளித்துள்ளார் ஸ்ரேயா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments