உகாதி - சிரஞ்சீவி கொடுத்த அல்வா!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:26 IST)
நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு. உற்சாக நாளான உகாதி அன்று, அரசியல் கட்சி தொடங்கி இனிப்பு தருவார் என எதிர்பார்த்தனர் சிரஞ்சீவியின் ரசிகர்களும், அவரது இனத்தவரும்.

ஆனால் அனைவருக்கும் கிடைத்ததோ செரிக்க முடியாத சிரஞ்சீவி மார்க் ஒரிஜினல் அல்வா!

அரசியல் கட்சி தொடங்குவதற்காக, உதயசூரியன் சின்னத்தை தேர்வு செய்திருந்தார் சிரஞ்சீவி. இதற்கு ஆந்திர தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உகாதி அன்று புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் பிரமுகர்கள் பலர் சிரஞ்சீவியின் கட்சியில் இணைய ஆவலாக இருந்தனர். அந்தோ பரிதாபம்! எதிர்பார்ப்பு ஏதும் நடக்கவில்லை.

கட்சி தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என பேட்டியளித்துள்ளார் சிரஞ்சீவியின் மைத்துனரும், மக்கள் தொடர்பாளருமான அல்லு அரவிந்த். காந்திருந்தவர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments