முதல்வருடன் ராதிகா சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:20 IST)
தென்னிந்திய டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா, சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு சம்பள உயர்வு குறித்து பெப்சி மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சினி டெக்னிஷியன் யூனியனைச் சேர்ந்த சிலர், ராடான் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர் மற்றும் பிரமிட் சாய்மீராவின் சிம்ரன் திரை படப்பிடிப்புத் தளங்களில் அத்துமீறி நுழைந்தனர். கேமரா ஒயர்களை பிடுங்கி எரிந்ததுடன் கேமரா உதவியாளரையும் தாக்கினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்று கமிஷனரிடம் புகார் தெரிவித்தார் ராதிகா. பிறகு தமிழக முதல்வரை சந்தித்து புகார் கொடுத்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த முதல்வர், இன்று ஒரு நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மட்டும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்? வைரல் புகைப்படம்..!

நீங்களா? திரிஷாவா? ‘மௌனம் பேசியதே’ படத்தில் தன்னுடைய ரோலை பற்றி பேசிய லைலா

நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்ற கார் திடீர் விபத்து.. என்ன நடந்தது>

விலைக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்!.. No சொன்ன ராஷ்மிகா - விஜய தேவரகொண்டா!..

Show comments