நான் கடவுளில் கவிஞர் விக்கிரமாதித்யன்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (20:08 IST)
இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவுக்குமான தொடர்பு ரொம்பவும் மெல்லியதுமு. இப்போது அதில் மாற்றம். கதை வசனத்தில் மட்டுமல்லாது, நடிப்பிலும் இலக்கியவாதிகள் முத்திரை பதிக்கிறார்கள்.

பாலாவின் நான் கடவுள் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுவது தெரியும். அதில் முக்கியமான வேடத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் நடித்துள்ளார்.

தமிழ் நவீன இலக்கியத்தில் தவிர்க்க முடியாதவர் விக்ரமாதித்யன். கதை, கவிதை, கட்டுரைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நடிப்பு அனுபவம் இதுவே முதல் முறை.

சுந்தர் சி.யின் ஆயுதம் செய்வோம் படத்திலும் ஒரு இலக்கியவாதி நடிக்கிறார். அவர் வேல. ராமமூர்த்தி. கிராமம் சார்ந்த கதைகள் இவரது அடையாளம்.

தமிழ்ப் படங்களில் இலக்கிய அம்சம் குறைவு என்ற புகார் இனி வராது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments