தண்ணீரை தர மறுத்த வஸந்த்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (18:47 IST)
இலக்கியத்தின் மீது இயக்குனர் வஸந்திற்கு தீராக் காதல். எழுத்தாளர் சா. கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை குறும்படமாக எடுத்தவர், கந்தசாமியின் சாயவனம் நாவலை திரைப்படமாக எடுப்பதற்கு முறைப்படி உரிமை வாங்கியிருக்கிறார்.

எழுத்தாளர் அசோகமித்ரனின் தண்ணீர் நாவலின் உரிமையும் வஸந்திடமே இருக்கிறது. மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, தண்ணீரை இந்தியாவின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார்.

சமீபத்தில் தண்ணீர் நாவலின் உரிமை வஸந்திடம் இருப்பதை அறிந்து தயாரிப்பாளர் ஒருவர் வஸந்தை அணுகியிருக்கிறார். அவர் அழுத்திக் கேட்டும் தண்ணீர் நாவலின் உரிமையைத் தர மறுத்திருக்கிறார் வஸந்த்.

எத்தனை வருடங்கள் ஆனாலும், தண்ணீரை தானே இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் வஸந்த். விரைவில் அந்த வசந்தம் வந்தால் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

AK64 படத்தை தயாரிக்கப்போவது இவரா?!.. ஆனா ஒரு கண்டிஷன்!...

சூர்யா 46 தலைப்பு வேற லெவல்!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Show comments