Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரை தர மறுத்த வஸந்த்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (18:47 IST)
இலக்கியத்தின் மீது இயக்குனர் வஸந்திற்கு தீராக் காதல். எழுத்தாளர் சா. கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை குறும்படமாக எடுத்தவர், கந்தசாமியின் சாயவனம் நாவலை திரைப்படமாக எடுப்பதற்கு முறைப்படி உரிமை வாங்கியிருக்கிறார்.

எழுத்தாளர் அசோகமித்ரனின் தண்ணீர் நாவலின் உரிமையும் வஸந்திடமே இருக்கிறது. மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, தண்ணீரை இந்தியாவின் சிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடுகிறார்.

சமீபத்தில் தண்ணீர் நாவலின் உரிமை வஸந்திடம் இருப்பதை அறிந்து தயாரிப்பாளர் ஒருவர் வஸந்தை அணுகியிருக்கிறார். அவர் அழுத்திக் கேட்டும் தண்ணீர் நாவலின் உரிமையைத் தர மறுத்திருக்கிறார் வஸந்த்.

எத்தனை வருடங்கள் ஆனாலும், தண்ணீரை தானே இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார் வஸந்த். விரைவில் அந்த வசந்தம் வந்தால் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments