கஞ்சா கருப்பு,சந்தானத்துக்கு தடை!

Webdunia
webdunia photoFILE
கஞ்சா கருப்பு, சந்தானம், பிரகாஷ்ராஜ், ஜோதிர்மயி, மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க... இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்த படம் அறை எண் 305ல் கடவுள்.

இயக்குனர் ஷங்கரின் எஸ்.பிலிம்ஸ் தான் படத்தை தயாரிக்கிறது.முதல் படத்தைப் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை எடுக்கப் போகிறார் சிம்புதேவன்.

வருகிற பதினாலாம் தேதி பாடல் காட்சியோடு படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் கஞ்சா கருப்பு, சந்தானம் இருவரையும் கூப்பிட்ட இயக்குனர் படம் முடிந்து ரிலீஸாகும் வரை இந்தப் படம் பற்றி யாரிடமும் எதுவும் பேசவேண்டாம்.

குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ரொம்ப கவனமாக இருங்கள் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

இரண்டு பேரும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஷங்கர் காம்ப்பவுண்ட் என்றாலே ரகசியம் தானா!?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments