Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சஹஜ் சமாதி: பானுமதி நரசிம்மனின் தியான நுட்பம்!

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:25 IST)
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சகோதரி பானுமதி நரசிம்மனிடம்   எளிமையான தியானத்தின் கலை கற்றுக் கொள்ளுங்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் 300 வெவ்வேறு இடங்களில் தியானிக்க கற்றுக்கொள்ளவுள்ளனர். 
 
மே மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பானுமதி நரசிம்மனிடம் இருந்து சஹஜ் சமாதி தியானம் நுட்பத்தை கற்றுக் கொள்ள உள்ளனர். பானுமதி நரசிம்மன் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் சகோதரி மற்றும் குருதேவ் புத்தகத்தின் எழுத்தாளர். 
 
3,000-க்கும் மேற்பட்ட வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வுகள், இன்று தியான பலன்களின் பொது அறிவுகளாக மாறி வருகின்றன. வழக்கமாக சஹஜ் சமாதி நடைமுறைகளின் நன்மைகள் தெளிவான சிந்தனை, அதிகரித்த ஆற்றல், சிறந்த உடல் ஆரோக்கியம், மேம்பட்ட உறவுகள் மற்றும் மன அமைதி ஆகியவை அளிக்கும்.
 
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக உளவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், இதய ஆரோக்கியம், நரம்பு மண்டலம் மற்றும் மருத்துவ மன அழுத்தம் ஆகியவற்றில் சஹஜ் சமாதி தியானத்தின் ஆய்வு சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை பெற்றது.
 
சஹஜ் சமாதி நுட்பம் எளிதான மற்றும் எளிமையான தியான வழியை கற்பிக்கிறது. இதில் 14 வயதுக்கு மேலானவர்கள் தியானிக்க கற்றுக்கொள்ளலாம். தியானிப்பவர்கள் ஒரு எளிய ஒலி மனநிலையை பயன்படுத்த கற்று கொள்கின்றனர். இது மனதை அமைதியாக்குகிறது. 
 
இந்த தியானத்தின் மூலம் மன அழுத்தம் மறைந்து, முடிவெடுக்கும் திறன் வளர்ந்து முன்னேற்றம் மற்றும் மக்கள் வாழ்க்கையில்  தெளிவு பெருகிறார்கள். தியானம் முழுவதும் நம்மை உற்சாகமாக இருக்க உதவுகிறது. இது உங்கள் புன்னகையை நிலைக்க செய்கிறது என்கிறார் திருமதி. பானுமதி. 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments